">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட மிஷ்கின் – தெரிஞ்சு தான் பண்றீங்களா சார்..?
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட வித்யாசமான கதைகளை தனக்கே உரிய ஸ்டைலில் படமெடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் இயக்குனர் மிஸ்கின். தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமான இவரது படங்கள் ஒவ்வொன்றும் அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட கதைகள்.
துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடையந்த மிஸ்கின் அந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதையடுத்து தரமான படம் ஒன்றை இயக்கி அனைவரும் வாய் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சிறப்பான வெற்றியை கொடுக்கவேண்டும் என எண்ணி அடுத்த படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துள்ளார்.
அந்தவகையில் தற்ப்போது தான் இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிகர் வடிவேலு வில்லனாகவும் , மற்றும் சிம்பு ஹீரோவாகவும் இருவரையும் ஒன்றாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். கதாநாயகி வேடத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாராம். இதை கேட்டவுடன் அனைவரும், என்ன ஆகிவிட்டது மிஷ்கின் சாருக்கு ..? என முணு முணுத்து வருகின்றனர் காரணம், சிம்பு , வடிவேலு இருவருமே ஷூட்டிங் வருவதற்கு அடம்பிடிப்பவர்கள் இவர்களை நம்பி படம் எடுத்த இயக்குனர்களே முடிக்க முடியாமல் திணறி வரும் நிலையில் மிஷ்கின் தெரிந்தே புதைகுழிக்குள் விழுகிறார் என கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகின்றனர்.