">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ரஜினி சிகரெட் பிடிப்பதை எப்படி நிறுத்தினார் தெரியுமா? – ரகசியம் உடைத்த பி.வாசு
நடிகர் ரஜினிகாந்தை வைத்து பணக்காரன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி, குசேலன் என பல திரைப்படங்களை இயக்கியவர் பி.வாசு. ரஜினியின் ஆஸ்தான இயக்குனர்களில் பி.வாசு முக்கியமானவர்.
ரஜினிக்கு பல வருடங்களாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. செயின் சுமோக்கர் என அழைக்கப்பட்ட அவர் தற்போது சிகரெட் பிடிப்பதையே நிறுத்திவிட்டார்.
இதுபற்றி பி.வாசு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
யார் கூறியும் ரஜினி புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவரே நிறுத்திவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அவர் புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாக பலரும் நினைக்கின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை. ஒரு பழக்கம் வேண்டாம் என நமது உடமே நமக்கு சொல்லும். அப்படித்தான் அவரே நிறுத்திவிட்டார். இது இன்றைய இளைஞர்களுக்கும் பொருந்தும். அவர்களுக்கு அறிவுரை கூற தேவையில்லை’ என பி.வாசு கூறினார்.