">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆஸ்கர் வென்ற பாராசைட் அதற்கு தகுதியானதுதானா? இயக்குனர் வெற்றிமாறன் கருத்து!
2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்ற படமான பாராசைட் திரைப்படம் பற்றி இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளில் நான்கு பிரிவுகளில் வெற்றி பெற்ற படமான பாராசைட் திரைப்படம் பற்றி இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த திரைக்கதை, இயக்குனர், சிறந்த படம், சிறந்த சர்வதேசத் திரைப்படம் என நான்கு விருதுகளைப் பெற்றது பாராசைட். அன்று முதல் அந்த படம் அதற்குத் தகுதியானதுதானா என்ற விமர்சனங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்திய இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அந்த படத்தைப் பற்றி எதிர்மறையாக பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.
இந்நிலையில் அந்த திரைப்படம் உண்மையிலேயே ஆஸ்கருக்கு தகுதியானதுதானா என்ற கேள்வியை இயக்குனர் வெற்றிமாறனிடம் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இணையம் மூலமாக நடந்த ஒரு உரையாடலில் கேட்டார். அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன் ‘அந்த திரைப்படம் முதலாளித்துவ வாழ்க்கை முறையை கேள்வி கேட்கிறது. இந்த வாழ்க்கை முறையில் ஒரு சாதாரண மனிதன் எப்படி பாதிகின்றான் என்பதையும் ஏழை பணக்காரன் வித்தியாசத்தையும் தெளிவாக முன் வைக்கிறது. வெள்ளத்தால் இந்த ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும் போது பணக்கார பெண் அருமையான வானிலை என்று அதை கொண்டாடுகிறாள். தலாளித்துவத்தைக் கேள்வி கேட்கும் தன்மைதான் ஆஸ்கரில் இதற்குச் சாதகமாக இருந்தது என நான் நினைக்கிறேன். அமெரிக்கர்கள் இப்போது தங்களது வாழ்க்கை முறையைக் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தார்மீக ரீதியில் அந்த படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம், மேலும். ஆஸ்கர் என்பது ஒரு நல்ல படத்துக்கான அளவுகோல் கிடையாது. வெற்றி பெற்ற வணிகப் படங்களில் இருக்கும் ஒரு ஒழுங்கான உணர்வுபூர்வமான படங்களைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.’ எனக் கூறியுள்ளார்.