">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
திருமணமே வேண்டாம்… சாய் பல்லவியின் அதிர்ச்சி முடிவு- ஏன் தெரியுமா?
நடிகை சாய்பல்லவி தனக்கு திருமணமே வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லியுள்ளார்.
நடிகை சாய்பல்லவி தனக்கு திருமணமே வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக சொல்லியுள்ளார்.
பிரேமம் என்ற ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு அவர் பல படங்களில் நடித்தாலும் இன்றுவரை பிரேமம் மலர் டீச்சர்தான் அவரது அடையாளமாக உள்ளது. நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாத அவர் மருத்துவராகவும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துவரும் அவர் முதன் முதலாக திருமணம் குறித்து பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் ‘நான் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை. அப்படி செய்துகொண்டால் என் பெற்றோரை பிரிந்து செல்ல நேரிடும். அதனால் கடைசி வரை அவர்களுடனே வாழ்ந்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.