">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சேவாக்கை அடித்திருப்பேன்… அக்தர் கருத்தால் ரசிகர்கள் கோபம்!
சேவாக் தன்னைப் பற்றி சொன்னது மட்டும் நடந்திருந்தால் அவரை நான் அடித்திருப்பேன் எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர்.
சேவாக் தன்னைப் பற்றி சொன்னது மட்டும் நடந்திருந்தால் அவரை நான் அடித்திருப்பேன் எனக் கூறியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர்.
சில தினங்களுக்கு முன்னர் சேவாக் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சேவாக், தனக்கும் அக்தருக்கும் இடையே நடந்ததாக ஒரு நிகழ்ச்சி பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். அவரது பேச்சில் ‘ஒரு போட்டியின் போது அக்தர் எனக்கு பவுன்ஸர்களை வீசிக்கொண்டே ஹூக் ஷாட் அடி என்னை சீண்டினார். நான் அதற்கு எதிரில் இருக்கும் சச்சினுக்கு வீசுங்கள். அவர் ஹூக் ஷாட் ஆடி சிக்ஸ் அடிப்பார். அப்போது தெரியும் அப்பா அப்பாதான்.. பிள்ளை பிள்ளைதான் என்று கூறினேன்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் பற்றி அக்தர் கூறியுள்ள கருத்துதான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கூற்றின் படி ’எங்கள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அப்படி மட்டும் சேவாக் சொல்லியிருந்தால் அவரை நான் மைதானத்திலும் கேலரியிலும் அவரை அடித்திருப்பேன்’ எனக் கூறியுள்ளார். அக்தரின் இந்த கருத்தானது கிரிக்கெட் சேவாக் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.