">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி: தற்கொலை செய்துகொண்ட 25 வயது நடிகை
ஊரடங்கால் ஏற்பட்ட நிதி நெருக்கடி: தற்கொலை செய்துகொண்ட 25 வயது நடிகை
கொரோனா தீவிரமாக பரவுவதை அடுத்து கடந்த மார்ச் 21ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்ததே. இதனால் பலரது பொருளாதாரம் பாதிக்கப்ப்ட்டுள்ளதும் உண்மை. பல் இடங்களில் உணவுக்கு வழியின்றி பாதிக்கப்படுள்ளனர். அதுமட்டுமின்றி மன அழுத்ததிற்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகை ஒருவர் ஊரடங்கால் ஏற்பட்ட பண நெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

கிரைம் பேட்ரோல், லால் இஷ்க் உள்ளிட்ட பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர் ப்ரக்ஷா மேத்தா (Preksha Mehta). 25 வயதான இவர் மத்திய பிரேதசத்தில் உள்ள இந்தூரில் தனது வீட்டில் நேற்று முந்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனாலும் இவரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஊரடங்கால் ஏற்பட்ட நிதிநெருக்கடி மற்றும் மன அழுத்தம் காரணமாகவே ப்ரக்ஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
Preksha Mehta instagram