">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஆண் குழந்தை கோவிட்.. பெண் குழந்தை கொரோனா .. பெயர் சூட்டிய பெற்றோர்கள்
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2301 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரானா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் அதிர்ச்சி ஒரு புறம் எனில் மறுபக்கம் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் பெண் குழந்தைக்கு கொரோனா எனவும், ஆண் குழந்தைக்கு கோவிட் எனவும் பெற்றோர் பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதி உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஊரடங்கால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை குறிக்கும் வகையில் இப்படி பெயர் வைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், உத்திரபிரதேசம் தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். கொரோனா பரவாமல் இருக்க பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் அதன் நினைவாக ‘லாக்டவுன்’ என பெயர் வைத்துள்ளதாக கூறுகின்றனர்.
இதேபோல், கோரக்பூரில் ஒரு பெண் குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.