">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வலியை காலம் மாற்றாது! மகள் மறைந்து 8 ஆண்டுகள் – பாடகி சித்ரா உருக்கம்
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை தேன் குரலில் பாடி வருபவர் பாடகி சித்ரா. சின்ன குயில் சித்ரா என ரசிகர்கள் அவரை அழைப்பதுண்டு.தற்போது வளர்ந்து வரும் பல பாடகிகளுக்கு முன் மாதிரியாக இருப்பவர்.�
விஜய சங்கர் என்பவரை திருமணம்செய்து கொண்டார். அவருக்கு நந்தனா என்கிற பெண் குழந்தை இருந்தாள். 8 வருடங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பாட சென்ற போது, ஹோட்டலில் இருந்த அவரின் மகள் நீச்சல் குளத்தில் விழுந்து இறந்து போனாள்.
இவர் இறந்து 8 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இது தொடர்பான ஒரு உருக்கமான பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ‘இங்கு ஒவ்வொரு பிறப்பும் ஒரு காரணத்திற்காகவே பூமியில் நிகழ்கிறது எனவும், அந்த வேலை முடிந்த பின் அந்த உயிர் இவ்வுலகை விட்டு சென்றுவிடும் என மக்கள் செல்கின்றனர். ஆனால், அதை அனுபவித்த மனிதர்களுக்கே இது உண்மையில்லை என்பது புரியும். மகளை இழந்த வேதனை இன்னும் என்னை விட்டு செல்லவில்லை. மி ஸ் யூ நந்தனா’ என அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.