">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சினிமா மட்டுமல்ல தொலைக்காட்சியிலும் பாலியல் தொல்லைதான் – பிரபல நடிகை குற்றச்சாட்டு!
தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்து மிகப்பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கல்யாணி தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்து மிகப்பெரிய கதாநாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கல்யாணி தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து பேசியுள்ளார்.
அள்ளித்தந்த வானம், ரமணா உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் மூலம் தமிழகம் எங்கும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் கல்யாணி. வளர்ந்த பின்னர் சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் பெரிய அளவில் வர முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகி, சீரியல் மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கவும் செய்தார். ஆனால் அங்கிருந்தும் திடீரென விலகி திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் தன்னால் ஏன் பெரிய கதாநாயகியாக வரமுடியவில்லை என்பது குறித்து பதிலளித்துள்ளார். அதில். ‘சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்த போது, என் அம்மாவுக்கு போன் செய்து பெரிய படத்தில் உங்கள் மகள்தான் கதாநாயகியாக நடிக்க போகிறார். ஆனால்… ஒரு சின்ன அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்று பச்சையாக கேட்பார்கள். அதனால் சினிமாவே வேண்டாம் என முடிவு செய்தோம்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர் ’சின்னத்திரையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது உயர் பதவியில் இருந்தவர் இரவில் பப்புக்கு செல்லலாமா என்று கேட்டார். மாலையில் 'காப்பி ஷாப்'பில் சந்திக்கலாம் என்றேன். அதனால் அவர் என்னை அந்த நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டார்’ எனறு கூறியுள்ளார்.