">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தொடரும் நீட் தேர்வு பலி… ஹால்டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை…
நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வரவில்லை என்பதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத்.
மருத்துவபடிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிமுகப்படுத்தியது கிராமம் மற்றும் சிறு நகரங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இதன் விளைவாக தமிழகத்தை சேர்ந்த அனிதா ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதிலிருந்து பின் வாங்கவில்லை. உச்ச நீதிமன்றமும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்துவிட்டது.
ஒருபக்கம், நீட் தேர்வு பயம் உள்ளிட்ட சில காரணங்களால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கோவையை சேர்ந்த சுபஸ்ரீ(19) என்கிற மாணவி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் உள்ள களபம் எனும் கிராமத்தில் வசிக்கும் ஹரிஷ்மா என்கிற மாணவி நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவருக்கு ஹால்டிக்கெட் வரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த ஹரிஷ்மா விஷம் குடித்து விட்டார். எனவே, அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரை பெற்றோர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்து விட்டார்.