">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
மாமனார் வீட்டில் திருடிய பிரபல நடிகை… எல்லாத்தும் காரணம் கொரோனாவாம்!…
மாமனார் வீட்டில் திருடிய பிரபல நடிகை… எல்லாத்தும் காரணம் கொரோனாவாம்!…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வசிப்பவர் தேசிங்கு(55). இவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டைப்பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.50ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக பண்ருட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், தேசிங்கும் மகன் மணிகண்டன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது அவர்தான் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது.
கார் ஒட்டுனர் வேலை செய்து வந்த மணிகண்டன் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் அரண்மனைக்கிளி, தெய்வமகள் ஆகிய நாடகங்களில் துணை நடிகையாக நடித்து வரும் பரமேஸ்வரி என்கிற சுசித்ராவை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கால் சின்னத்திரை படப்பிடிப்பு நடைபெறவில்லை. எனவே, பணமில்லாமல் தவித்து வந்த சுசித்ரா, தந்தை வீட்டில் கொள்ளையடிக்குமாறு மணிகண்டனை தூண்டிவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தலைமறைவாகியுள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.