">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லைவ் சாட்டில் வந்த ஆண்ட்ரியா & ஐஸ்வர்யா ராஜேஷ் … பேசிய விஷயம் ரொம்ப முக்கியமானது!
வடசென்னை படத்தின் நாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் தோன்றி பேசினர்.
வடசென்னை படத்தின் நாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் தோன்றி பேசினர்.
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக நடிகையாக இருந்தாலும் வட சென்னை திரைப்படம் ஆண்டிரியாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. அதே போலதான் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பின் போதே இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இருவரும் இப்போது இன்ஸ்டாகிராமில் லைவ் சாட்டில் வந்து பேசினர்.
ஆண்ட்ரியா ‘ சினிமாவில் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்படுகின்றனர். பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனப் பலரும் நினைக்கின்றனர்’ என்று கூற, ஐஸ்வர்யா ராஜேஷோ ‘சினிமாவில் இருக்கும் பெண்களை ஆண்கள் தங்கள் தங்கைகளாக, அம்மாவாக நினைக்க வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்கள் நெகட்டிவிட்டியாக இருப்பதால் அதைப் படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.