">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அடுத்த படம் இதுதான்! புதிய பாய்ச்சலுடன் சூது கவ்வும்’ நளன் குமாரசாமி..
சூது கவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக தோன்றியவர் நளன் குமாரசாமி. வித்தியாசமனா, புதிய கதையை உருவாக்கி அவர் சொல்லிய விதம், அதில் கையாண்ட நகைச்சுவை என அனைத்தும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அதன்பின் மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் பலரையும் கவந்தது. அப்படம் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் அவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. மேலும், அவர் சூது கவ்வும் 2ம் பாகத்திற்கான கதையை எழுதி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
ஆனால், பிரபல இணையதளத்திற்கு பேட்டியளித்த நளன் குமாரசாமி அதை மறுத்துள்ளார். இதுவரை வெளிவந்த தமிழ் சினிமாவின் ஆக்ஷன் மசாலா ஆகிய திரைப்படங்களை ஆய்வு செய்வது போலவும், அதற்கு சமர்ப்பணம் செய்து போலவும் ஒரு கதையை எழுதி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நளன் குமாராசாமியின் இந்த புதிய முயற்சி தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.