">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
45 ஆண்டுகள் உயரத்தைத் தக்கவைத்த தந்திரம் – ரஜினி குறித்து வைரமுத்து கவிதை!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். இதனை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதை கொண்டாடும் விதமாக ரஜினியின் காமன் டிபி போஸ்டரை பிரபலங்கள் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினர்.
இதையடுத்து தொடர்ந்து பிரபலங்கள் , ரசிகர்கள் , நண்பர்கள் என அனைவரும் வாழ்த்து கூறி அவரது சினிமா பயணத்தை குறித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்ப்போது கவிஞர் வைரமுத்து தந்து ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
அந்த பதிவில்,
வைரமுத்து
@Vairamuthu
·
1h
நகலெடுக்க முடியாத
உடல்மொழி
சூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்
45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்
இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்
இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!
என பதிவிட்டுள்ளார்.
நகலெடுக்க முடியாத
உடல்மொழிசூரியச் சுறுசுறுப்பு
கிழவி குழவியென
வசப்படுத்தும் வசீகரம்45 ஆண்டுகளாய்
மக்கள் வைத்த உயரத்தைத்
தக்கவைத்த தந்திரம்இரண்டுமணி நேரத்
தனிமைப் பேச்சிலும்
அரசியலுக்குப்
பிடிகொடுக்காத பிடிவாதம்இவையெல்லாம் ரஜினி;
வியப்பின் கலைக்குறியீடு!@rajinikanth— வைரமுத்து (@Vairamuthu) August 10, 2020