manisha koirala: டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா .. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய மனிஷா கொய்ராலா

 
manisha koirala: டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா .. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய மனிஷா கொய்ராலா

90களில் இந்திய சினிமாவில் கனவு கன்னியாக இருந்தவர் மனிஷா கொய்ராலா. பாலிவுட்டில் கலக்கி கொண்டிருந்த மனிஷா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படம் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் தமிழக ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் இந்தியன், அர்ஜூன் உடன் முதல்வன், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் உயிரே மற்றும் ரஜினியுடன் பாபா என தொடர்ச்சியாக படங்களில் நடித்தார். இதில் பாபா படம் மட்டுமே தோல்வி அடைந்தது.

திரைத்துறையில் உச்சத்தில் இருந்த மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கையில் 2012-ஆம் ஆண்டு பெரும் புயல் வீசியது. அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவர், அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை எடுத்து மீண்டு வந்தார். சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஹீராமண்டி வெப் சீரிஸில் மல்லிகாஜான் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் ரீ-என்ட்ரி கொடுத்தார். அவரது நடிப்பு விமர்சன ரீதியாகப் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

manisha koirala: டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா .. ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய மனிஷா கொய்ராலா

இந்த நிலையில்தான், தற்போது அவரது புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் .

From Around the web