பால் கெட்டா தயிறு!.. தண்ணி ஊத்துனா மோறு!.. மன்சூர் அலிகான் சொன்ன உழைப்பாளர் தின வாழ்த்து!…

 
பால் கெட்டா தயிறு!.. தண்ணி ஊத்துனா மோறு!.. மன்சூர் அலிகான் சொன்ன உழைப்பாளர் தின வாழ்த்து!…

கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். சினிமாவில் எந்த உடல்மொழி காட்டி நடிப்பாரோ அப்படித்தான் நிஜ வாழ்விலும். இன்னும் சொல்லப்போனால் நிஜ வாழ்வில் அவர் எப்படியோ அப்படியேதான் திரையிலும் பிரதிபலிக்கிறார் என்றும் கூட சொல்லலாம். அலட்டலான உடல் மொழி, நக்கலான பேச்சு என நிஜ வாழ்க்கையிலும் ரசிகர்களை கவர்பவர் இவர். துவக்கத்தில் பல படங்களில் வில்லனாக நடித்த அவர் ஒரு கட்டத்தில் காமெடி கலந்த வில்லனாக நடிக்க துவங்கினார். அது அவருக்கு கை கொடுத்தது..

ஒருபக்கம் சினிமாவில் நடித்தாலும் ஒருபக்கம் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்ட மனிதராகவும் மன்சூர் அலிகான் இருக்கிறார். இந்திய ஜனநாயகப் புலிகள் என்கிற அரசியல் கட்சியை துவங்கி பல தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட திருச்சியில் நான்கு தொகுதிகளில் அவரின் கட்சி போட்டியிட்டது. மன்சூர் அலிகான் லால்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

ஒரு பக்கம் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டிக் கொள்வார் மன்சூர் அலிகான். திரிஷாவை பற்றி ஒரு முறை இவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்த அவர் மன்னிப்பு கேட்கும் வரை சென்றது..

இந்நிலையில்தான், இன்று மே 1 உழைப்பாளிகள் தினம் என்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘உழைக்கிறவன் ரோட்டில் கிடக்கிறான்.. சுரண்டரவன் ஓஹோன்னு இருக்கான்.. பால் கெட்டா தயிறு.. தண்ணி ஊத்துனா மோரு.. திராட்சை சக்தி.. கெட்டா அதிசக்தி ஒயின், உழைப்பாளியே நீ கெடவில்லை.. வீறு கொண்டு எழு.. எல்லோருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்’ என பதிவிட்டிருக்கிறார்..

From Around the web