">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
திருமணமான சிறுமி கொடூர கொலை… 13 இடத்தில் கத்திக்குத்து.. மதுரையில் அதிர்ச்சி…
திருமணமான சிறுமி கொடூர கொலை… 13 இடத்தில் கத்திக்குத்து.. மதுரையில் அதிர்ச்சி…
மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டிக்கு அருகே உள்ள டி.அம்மா பட்டியை சேர்ந்தவர் தவிடன். இவரின் மகள் ஜெயசக்தி பாலா. இவருக்கு 18 வயது நிறைவடையாத நிலையில், விருதுநகர் மாவட்டம் மத்தியசேனை பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவந்ததும், 18 வயது முடியும் வரை ஜெயசக்தி பெற்றொரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
இநிந்லையில், கடந்த 11ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று ஜெயசக்தி வீடு திரும்பவில்லை. எனவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே, அவர்கள் ஜெயசக்தியை தேடி வந்தனர்.
இந்நிலையில், டி கல்லுப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய் ஒன்றில் ஜெயசக்தி பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடலில் 13 இடங்களில் கத்திக்குத்து இருந்து பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே, அவரை யார் கொலை செய்தது என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.