நயன்தாரா இல்லைனா திரிஷா - மோகன் ராஜாவின் பக்கா பிளான்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் மோகன் ராஜாவும் ஒருவர். ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி , தில்லாலங்கடி , தனி ஒருவன் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் இவர். கடைசியாக தெலுங்கில் காட்பாதர் என்ற படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் கார்த்தி நடிக்கும் ஒரு படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. பிரின்ஸ் பிச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஒரு மேமிலி டிராமாவாக உருவாக உள்ளதாம்.

மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைகக் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.ஏற்கெனவே இவரது இயக்கத்தில் தனி ஒருவன், வேலைக்காரன் மற்றும் காட் பாதர் ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஒருவேலை நயன்தாரா கால்ஷீட் கிடைக்கவில்லை என்றால் திரிஷாவை ஒப்பந்தம் செய்யலாம் என்று மோகன் ராஜா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
