
Cinema News
நயன்தாரா கூட நடிக்க ‘அந்த’ ஹீரோ ரெம்ப யோசிச்சார்., ஆனா, படம் சூப்பர் டூப்பர் ஹிட்.!
Published on
தமிழ் சினிமாவில் சில காம்பினேஷன்கள் வேண்டா வெறுப்பாக கூட இணைந்திருக்கும். ஆனால், அந்த காம்பினேஷன் தான் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக இருக்கும். அப்படி ஓரு மேஜிக் சில படங்களில் மட்டுமே நடைபெறும். அப்படி தான் யாரடி நீ மோகினி திரைப்படத்திலும் நடந்துள்ளது.
ஆம். இந்த படத்தை தெலுங்கில் படமாக்க இயக்குனர் செல்வராகவன் கதை, திரைக்கதை எழுதி, இயக்க தயார் செய்து விட்டார். அந்த சமயம் தான். அங்கு ஷூட்டிங் எடுத்து கொண்டிருக்கும் அதே வேளையில், தமிழிலும் இப்படம் தயாரானது.
இப்படதின் கதை, திரைக்கதையை செல்வராகவன் எழுத, மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கி இருந்தார். படம் தனுஷின் அதுவரை வந்த பட வசூல்களை தாண்டி வசூல் செய்து வெற்றிபெற்றது. இந்த திரைப்படம் அண்மையில் 14 ஆண்டுகளை நிறைவு செய்தது. அதனை கொண்டாடும் விதமாக ஒரு பேட்டியளித்து இருந்தார் இயக்குனர் மித்ரன் ஜவஹர்.
இதையும் படியுங்களேன் – கெட்ட வார்த்தைகளால் திட்டி தீர்த்து விட்டார் வெற்றிமாறன்.! குற்றம் சாட்டிய இயக்குனர்.!
அதில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். செல்வராகவன் கதை என்பதால் பட்ஜெட் பற்றி கவலையில்லை, தைரியமாக நான் வேலை செய்தேன். அதன் பிறகு, படத்தின் ஹீரோ தனுஷ் ஓகே. ஹீரோயினாக நயன்தாராவை ஓகே செய்தோம். ஆனால் அதில் தனுஷுக்கு உடன்பாடு இல்லை.
அதன் பின்னர் உங்களுக்கு அவங்க பாஸ் கதாபாத்திரம் அதனால் சரியாக இருக்கும் என கூறினேன். அவரும் ஒத்துக்கொண்டார். அதன் பிறகு அந்த ஜோடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது உங்களுக்கே தெரியுமே என தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...