மறுபடியுமா? இத்தாலியில் குட் நியூஸ் சொன்ன நயன்தாரா - ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் .

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு தொடர்ச்சியாக தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் குடும்பத்தோடு சென்று விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். அந்த வகையில் தற்போது திருமண நிலை கொண்டாடும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனது குழந்தைகளுடன் ஜோடியாக குடும்பமாக இத்தாலி நாட்டிற்கு ட்ரிப் அடித்து அங்கு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் தான் அவர் வெளிநாட்டிற்கு பயணம் செய்த புகைப்படங்களை குழந்தைகளோடு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபடியும் வெளிநாட்டிற்கு பயணம் சென்றுள்ள நயன்தாரா மிகுந்த மகிழ்ச்சியோடு இப்படியே இருக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
