பூக்கள் பூக்கும் தருணம்… இயற்கை ரசித்தவாறு நயன்தாரா!
நடிகை நயன்தாரா:
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
மிகச் சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வரும் இவர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட அழகான மகிழ்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
குறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மிகச்சிறந்த கணவராகவும், சிறந்த தந்தையாகவும் தென்பட்டு வருகிறார், நடிகை நயன்தாராவுக்கு கிடைத்த சிறந்த கணவர் என ரசிகர்கள் கூறும் அளவிற்கு அவ்வளவு அக்கறையாக அன்போடு பார்த்துக் கொள்கிறார்.
வெகேஷன் போட்டோஸ்:
கண்ணும் பட்டுவிடக்கூடாது இந்த ஜோடி இப்படியே இருக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துவதுண்டு. அவ்வப்போது திரைப்படங்களில் நடித்துவிட்டு கேப் கிடைக்கும் போதெல்லாம் அவுட்டிங் சென்று வரும் நடிகை நயன்தாரா தற்போது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வெகேஷன் சென்றிருக்கிறார்.
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. பூக்கள் பூத்து குலுங்கும் இடத்தில் நடிகை நயன்தாரா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
