Pandian Stores2: ஸ்கெட்ச் போட்டு குமரவேலை வஞ்சம் தீர்த்த அரசி… இனிமே ஆட்டம் செமையா இருக்குமே?

by AKHILAN |
Pandian Stores2: ஸ்கெட்ச் போட்டு குமரவேலை வஞ்சம் தீர்த்த அரசி… இனிமே ஆட்டம் செமையா இருக்குமே?
X

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

வீட்டில் இருப்பவர்கள் அழுதுக்கொண்டு இருக்க உமையாள் முதலில் புரியாமல் இருக்க பின்னர் தங்களை ஏமாற்றி விட்டதாக திட்டிக்கொண்டு இருக்கிறார். இதற்காக தான் முதலில் அரசியை படிக்க வைப்பதாக சொன்னாயா எனக் கேள்வி கேட்கிறார்.

அந்த நேரத்தில் அரசியுடன் வந்து இறங்குகிறார் குமரவேல். இதை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். குமரவேல் இறங்க அவரை அடிக்க பாய்கின்றனர். குமரவேலிடம் என் பொண்ணை என்னை செஞ்ச என கோமதி அழுதுக்கொண்டே கேட்கிறார்.

குமரவேல் வீட்டு ஆளுங்க வெளியில் வந்துவிட உடனே குமரவேல் தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ள அரசி நேற்று தனக்கு கால் செய்ததாகவும் உடனே பார்க்கணும் என கூறியதாகவும் சொல்லுகிறார். இருவரும் நேரில் சந்தித்ததாகவும் சொல்லுகிறார்.

தன்னை பார்த்ததும் அரசி கட்டிப்பிடித்து அழுதாள். நான் வேண்டும் எனக் கூறினார். மேலும் நைட் முழுசும் என்னுடனே இருந்தாள் எனவும் கூற எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே கோமதி வாயை மூடுடா என் பொண்ணை நான் அப்படி வளர்க்கலை.

அவ அப்படி செய்யவே மாட்டாள் என்கிறார். உடனே குமாரும் நான் சொல்றது தான் உண்மை. நான் எவ்வளவு சொல்லியும் அவள் கேட்கலை. எந்த கோயிலில் வேண்டும் என்றாலும் சத்தியம் செய்கிறேன் என குமார் திமிராக பேசுகிறார்.

அண்ணன், தம்பிகள் அடிக்க பாய அவர்களை அடக்குகின்றனர். அரசி எங்க அவள நீ எங்கே வச்சிருக்க எனக் கேட்கிறார்கள். உடனே குமார் தன்னுடைய காரை காட்ட எல்லாரும் அதிர்ந்து பார்க்க வெளியில் வருகிறார் அரசி.

என்ன சொல்வது என தெரியாமல் இருக்க அரசியிடம் என்ன நடந்தது எனக் கேட்க அவர் ஒரு நிமிடத்தில் தாலி செயினை எடுத்து காட்ட எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.

Next Story