ஆண்டி ஹீரோ ஸ்டைல சம்பவம் செய்யும் கதிர்… பாண்டியன் ஸ்டோர்ஸ்ல மூணாவது வில்லனா?
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் பெரிய அளவில் வில்லத்தனம் இல்லாத சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் ஹீரோவாக பார்க்கப்பட்ட கதிர் செய்திருக்கும் வில்லத்தனம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
முதல் சீசன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது சீசனில் அப்பா, மகன் பாசத்தை மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் இரண்டாவது சீசன் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே கதை இல்லாமல் காமெடி செய்து வந்த தயாரிப்பு குழு ஒரு வழியாக தேறும் கதைக்களத்தினை உருவாக்கி வைத்துள்ளனர். ஒரு பக்கம் பொய் சொல்லி மாட்டிக்கொண்ட தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டுக்கு தெரிந்து விட்டது.
ஆனால் சரவணன் தன்னுடைய முதல் காதலியை சந்தித்து அவரை கட்டிக்கொள்வதாக சத்தியம் செய்து விட்டார். வீட்டினர் மயிலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, ராஜீயின் அப்பா வெற்றிவேலுக்கு கேன்சர் இருப்பதாக கதை கொண்டு செல்லப்படுகிறது.
அவருடைய சிகிச்சை நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அம்மாவுடன் இருக்க வேண்டும் என வெற்றிவேல் விரும்புகிறார். இதனால் உண்மையை சொல்லாமல் அப்பத்தாவை வெளியேத்த ஏசி இருக்க வீட்டுக்கு போங்க இங்க ஏன் இருக்கீங்க எனத் திட்டி வீட்டை விட்டு அனுப்புகிறார்.
இதனால் சரவணன், செந்திலை தொடர்ந்து கதிருக்கும் ரசிகர்களிடம் கெட்ட பெயர் உருவாக போகும் வாய்ப்பே அதிகம் இருப்பதாக ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். ஹீரோயினுக்காக ஹீரோவை எல்லாம் காலி செய்ய பாக்குறாங்களே என பலரும் கலாய்த்து வருகின்றனர்.
