1. Home
  2. Latest News

Pandian Stores2: வீட்டிற்கு அழைக்கும் முத்துவேல், வடிவு… என்ன சொல்ல போகிறார் ராஜி?

Pandian Stores2: வீட்டிற்கு அழைக்கும் முத்துவேல், வடிவு… என்ன சொல்ல போகிறார் ராஜி?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாம் பாகத்தில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.

குமார் ஜாமீனில் வெளியே வந்திருக்க அவரிடம் மீண்டும் ராஜியை வீட்டிற்கு அழைத்து வர இருப்பதாக வடிவு கூறுகிறார். குமார் யோசனையாக பார்க்க அவர் இல்லாத சமயத்தில் நடந்த விவரங்களை கூறுகிறார்கள். 

முத்துவேல், அரசிக்கும் இப்படித்தானே கல்யாணமானது. அவர்கள் வந்து அழைத்து சென்று விட்டார்கள்தானே. நாமும் போய் ராஜியை அழைத்து வந்துவிடலாம் என கேட்டா எனக்கும் சரியான பட்டதாக கூறி விடுகிறார். சக்திவேலும் ராஜி சொன்ன விஷயத்தை விசாரித்து பார்த்தேன். 

அவர் சொன்னது முழுக்க உண்மை என்பதால் என்னாலும் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறிவிடுகிறார். அப்பத்தா இதைக் கேட்டு அதிர்ச்சியாகி எதா இருந்தாலும், பொறுமையாக யோசித்து செய்யுங்க. இந்த முடிவு எனக்கு சரியான படவில்லை என கூறி விடுகிறார்.

முத்துவேல் உனக்கு ரெண்டு குடும்பமும் சேரனும்னு ஆசை. என் மகளுடன் வாழ்க்கையை பணயமா வச்சி ரெண்டு குடும்பமும் சேர வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். ராஜியை அழைக்க சக்திவேலையும் கூப்பிட  நான் வந்தால் அங்கு பிரச்சனையாகும் என அவர் மறுத்து விடுகிறார்.

பின்னர் முத்துவேல் மற்றும் வடிவு இருவரும் பாண்டியன் வீட்டு வாசலில் நின்று ராஜியை அழைக்கின்றனர். அதை பார்க்கும் மயில் ஓடிச்சென்று அவரை அழைத்து வருகிறார். ராஜி அவர்களை கேள்வியாக பார்க்க உன்னை அழைச்சிட்டு போக வந்து இருக்கோம். வீட்டுக்கு போகலாம் என்கின்றனர். 

ஆனால் ராஜி அதிர்ச்சியாகிறார். கோமதி என்ன பேசுறீங்க என்கிறார். ஏன் உன் மகளை இப்படிதானே அழைச்சிட்டு போனீங்க என அவர் வாயை அடக்குகிறார் வடிவு. நீங்க யாரும் இதில் தலையிட வேண்டாம் என்றும் கூறிவிடுகிறார். ராஜியை வீட்டிற்கு அழைக்க அவர் பதில் பேசாமல் அமைதியாக இருக்கிறார். 

பாண்டியன் பேச வர நீ என் வீட்டில் உன் பொண்ணை அழைச்சிட்டு போனப்ப நான் எதுவும் பேசுனேனா எனக் கேட்க அவர் அமைதியாக சென்று விடுகிறார். தொடர்ந்து அவர்கள் அழைச்சிட்டு இருக்க ராஜி ஒரு நிமிஷம் என வீட்டிற்குள் செல்கிறார். 

Pandian Stores2: வீட்டிற்கு அழைக்கும் முத்துவேல், வடிவு… என்ன சொல்ல போகிறார் ராஜி?
#image_title

கதிரிடம் அவர் அம்மா, அப்பா வந்திருப்பதை சொல்லி என்னை கூப்பிடுறாங்க. நான் என்ன செய்யட்டும் எனக் கேட்க அவர் மனதில் போகாதே என நினைத்து கொண்டாலும் வாயை திறந்து உன் இஷ்டம் எனக் கூறிவிடுகிறார். இதில் ராஜி உடைந்து வெளியில் வருகிறார். 

கோமதி மீனாவிடம் இது நான் நடத்துன கல்யாணம். அப்படி உடைச்சு ராஜியை எப்படி அழைச்சிட்டு போவாங்க எனக் கூற அவர் இதை வெளியில் சொல்லுங்க என்கிறார். சொல்லத்தான் போறேன் என பேச போக அவரை அமைதியா இரு என வடிவு கூறுகிறார். 

வெளியில் வரும் ராஜியை கையை பிடித்து அழைக்க அவர் எடுத்து விட்டு அரசிக்கும், எனக்கும் வீட்டில் தெரியாத விஷயம் மட்டுமே ஒன்னு. அவள் பயந்து தானா தாலி கட்டிக்கிட்டா எனக்கு கதிர் கட்டினான். எங்க கல்யாணம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருக்கு. நான் எங்கும் வரலை என்கிறார். முத்துவேல் அதற்கெல்லாம் நீ இங்க இருக்க அவசியம் இல்லை. விவாகரத்து வாங்கிக்கலாம் என்கிறார். 

இல்லப்பா. நான் கஷ்டப்பட்டு இங்க இல்ல. பிடிச்சு போய் தான் இருக்கேன். என்னை கதிர் நல்லப்படியா பாத்துக்கிறான். என் கனவுக்காக அவன் உழைக்கிறான். அதுமில்லாமல் மாமா, அத்தை, அக்கா என இங்கு இருக்கவே பிடிப்பதாக சொல்லி விடுகிறார். 

என்னை தப்பா நினைச்சிக்காதீங்க. என்னை வெறுத்திடாதீங்க. பார்த்தா சிரிங்க. பேசுங்க எனக்கு அது போதும் என்கிறார். இதில் வடிவு மற்றும் முத்துவேல் அதிர்ச்சியாக இருக்க கோமதி என் மருமகளுக்கு இங்க இருக்க தான் பிடிச்சு இருக்கு அவளை கட்டாயம் செய்யாதீங்க என்கிறார். 

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.