">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வனிதாவால் பிளாட்பார்முக்கு வந்துட்டேன்… புலம்பும் பீட்டர்பால்…
வனிதாவால் பிளாட்பார்முக்கு வந்துட்டேன்… புலம்பும் பீட்டர்பால்…
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது கணவர் பீட்டர் பாலை விட்டு விலகினார். குடிப்பழக்கத்தை பீட்டரால் விட முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதன்பின் தனது யுடியூப் சேனலில் சமையல் வீடியோ போடுவது, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அவர் பிஸியாக இருந்து வருகிறார்.
ஆனால், பீட்டர் பாலின் நிலை பரிதாபமாக இருக்கிறதாம். வனிதா வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. முதல் மனைவி வீட்டிற்கும் செல்ல முடியாத நிலை. பீட்டர் பால் முன்பு தன்னுடைய அலுவலகத்தில்தான் தங்கியிருந்தார். வனிதா அங்கு சென்றும் அவரின் மானத்தை வாங்கிவிட்டதால் தங்க கூட இடமில்லாமல் தெருவில் அலைந்து வருகிறாராம் பீட்டர் பால்.
வனிதாவுடன் பிரச்சனை ஏற்பட்ட போது நண்பரின் வீட்டில் தங்கி இருந்தாராம். தற்போது அங்கிருந்து வெளியேறிவிட்டதால் பிளாட்பார்மில் படுத்து தூங்கி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. முன்பு அவர் யாரென்று தெரியாமல் இருந்தது. வனிதாவை திருமணம் செய்த பின் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. எனவே, வனிதாவால் நடுத்தெருவுக்கு வந்துட்டேன் என தனக்கு நெருக்காமனவர்களிடம் புலம்பி வருகிறாராம் பீட்டர் பால்..