">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கோவிலில் செருப்பு காலோடு போட்டோ ஷூட்… பின்னர் காலில் விழாத குறையா கதறிய நடிகை!
கோவிலில் செருப்பு காலோடு போட்டோ ஷூட்… பின்னர் காலில் விழாத குறையா கதறிய நடிகை!
பிரபல கேரளா சீரியல் நடிகையான நிமிஷா பிஜோ செய்த காரியம் ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகி அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆம், கேரளாவிலுள்ள அரண்மூலா கோவிலில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை நிமிஷா பிஜோ ஷூ காலோடு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் என கோவிலுக்கு எப்படி வரக்கூடாதோ அப்படி வந்தது மட்டுமல்லாமல் அங்கு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார்.
இதையடுத்து கோவிலின் தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் அந்த நடிகை அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைது செய்து விசாரித்த போது எனக்கு தெரியாது. நான் தெரியாமல் இந்த தவறை செய்துவிட்டேன். நான் போட்டோ ஷூட் நடத்தும்போது அங்கிருந்த பலரும் என்னை வேடிக்கை பார்த்தார்களே தவிர இது தவறு என கூறி என்னை கண்டிக்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். இனி இதுபோல் செய்யமாட்டேன் ஜாமீன் கொடுங்கள் என்று நீதிமன்றத்தை நாடி புலம்பினாராம்.