ப்ளீஸ்!.. விஜயகாந்துக்கு ஃபைட் வேண்டாம்!.. இயக்குனரிடம் சொன்ன பிரேமலதா.. அட அந்த படமா?!..

0
107

எம்.ஜி.ஆர் போல தொடக்கம் முதலே ஆக்சன் ஹீரோவாக தன்னை வளர்த்துக்கொண்டவர்தான் விஜயகாந்த். வாலிபராக இருக்கும்போதே அவர் அப்படித்தான். நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு மதுரையில் அலப்பறை செய்தவர்தான். சண்டை என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும்.

அதனால்தான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக இருந்தார் விஜயகாந்த். எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை பலமுறை பார்த்து ரசித்தவர்தான் விஜயகாந்த். சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தபோது நிறைய சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே அவருக்கு அதிகமாக இருந்தது.

துவக்கத்தில் அப்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் போகப் போக சண்டை காட்சிகளில் நடிக்கும் வாய்பு அவருக்கு கிடைத்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் முதல் வெற்றிப்படமாக அமைந்த சட்டம் ஒரு இருட்டறை கூட ஆக்‌ஷன் கலந்த ஒரு பழிவாங்கும் கதைதான்.

அதன்பின் பல திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து பிரபலமானார் விஜயகாந்த். அவரின் சண்டை காட்சிகளுக்காகவே அவருக்கு ரசிகர்களும் உருவானார்கள். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், மாநகர காவல் என பல படங்களிலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

அதேநேரம், சண்டை காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத சில கதைகளிலும் விஜயகாந்த் நடித்திருக்கிறார். அதில் ஒன்றுதான் விக்ரமன் இயக்கிய வானத்தை போல. இந்த படத்தில் தம்பிகளுக்காகவே வாழும் வேடத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். 2000ம் வருடம் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

இந்த படத்தின் கதையை விஜயகாந்திடம் விக்ரமன் சொன்னபோது அருகில் பிரேமலதாவும் இருந்தாராம். கதை சொல்லி முடித்தபின் ‘இந்த படத்தில் சண்டை காட்சி வைக்காதீங்க. இவரே சொன்னாலும் கேட்காதீங்க’ என சொன்னாராம் பிரேமலதா. ஆனாலும் விஜயகாந்தின் ரசிகர்கள் ஏமாந்துபோய்விடக்கூடாது என்பதற்காக படத்தின் இறுதியில் ஒரு சண்டை காட்சியை வைத்திருந்தார் விக்ரமன்.

google news