பராசக்தி தோல்விக்கு இதுதான் காரணமா?- போட்டுடைத்த தயாரிப்பாளர்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான படம் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஜெயம் ர்ரவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பல்ர் நடித்திருந்தனர். முன்னதாக இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இப்ப்டத்திலிருந்து அவர் விலகினார். பெரிய பட்ஜெட்டில் தயாரான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் ஏற்கெனவே விஜய் நடிப்பில் ஜன நயகன் படம் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென பராசக்தி படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவித்தனர். விஜயுடன் சிவகர்த்திகெயன் படம் மோதுகிறது என இப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் தணீக்கை சான்றிதழ் கிடைக்காததால் ஜன நாயகன் பொங்க்லலுக்கு வெளியாகவில்லை. பராசக்தி படம் மட்டுமே வெளியானது. ஆனால் படம் ரசிகர்களை பெரிதாக கவரவிலை. இதனல தோல்வியையே தழுவியது.

இந்த நிலையில் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் பராசக்தி தோல்வி குறித்து கூறுகையில், பராசக்தி குறித்த அதிக எதிர்பார்ப்பு, தணிக்கை சான்றிதழ் சிக்கல்கள் மற்றும் அதிகப்படியான பட்ஜெட் காரணங்களால் எதிர்பார்த்ததை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. ஆனாலும் ஹீரோக்களின் ஆதரவால் இப்படமும், இட்லி கடை படமும் லாபம் தந்தது என்று கூறியிருந்தார்.
