Categories: Cinema News latest news

10 லட்சத்திற்கு ஆசைப்பட்டு ஜெயில் படத்தை காலி செய்த சூர்யா உறவினர்..

வசந்தபாலன் இயக்கியுள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் சென்னையில் குடிசையில் வசிக்கும் மக்களை மறுகுடியமர்வு வைப்பதில் எழும் சிக்கல்கள் பற்றி பேசியிருந்தது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படம் ரிலீஸின் போதே பிரபல தயாரிப்பாளர் மற்றும் சூர்யாவின் உறவினர் நீதிமன்றத்திற்கு சென்று குடைச்சல் கொடுத்தார். அதன் விளைவாக ரூ.10 லட்சம் பணத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த பிரச்சனையால் ஜெயில் படத்தை திரையரங்குகளில் இருந்து மொத்தமாக எடுத்து விட்டனர். இதனால் தயாரிப்பாளருக்கு ரூ.7 முதல் 8 கோடி வரை நஷ்டம் எனக்கூறப்படுகிறது. சூர்யாவின் உறவினர் ஒரு படத்தின் தயாரிப்பாளரை காலி செய்துவிட்டார் என ஜிவி பிரகாஷ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா