மனம் உடைந்த ராதிகா - அரவணைத்து ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்!
பாரதிராஜாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது பாரதிராஜாவின் சவப்பெட்டியின் அருகே அமர்ந்து கொண்டு இருந்த நடிகை ராதிகாவை பார்த்ததும் கலங்கி அழுது கொண்டு இருந்தார் .
உடனே விஜய் அருகில் சென்று அவரை கட்டிணைத்து நீங்கள் எதற்கும் கவலைப்படாதீங்க அக்கா.. நான் இருக்கிறேன் என்று சொன்னவாறு அவரைக் காட்டி அணைத்து ஆறுதல் கூறி இருந்தார். ஆனால், ராதிகாவோ கொஞ்சம் கூட முதலமைச்சர் விஜய் என்ற மரியாதை கூட இல்லாமல் அவருக்கு எழுந்து நின்று கூட பதில் அளிக்காமல் இருக்கையில் அமர்ந்தபடி இருந்தார்.

இது தற்போது சமூக வலைதளவாசிகளிடையே பேசு பொருளாகி உள்ளது. முதலமைச்சர் விஜய் அவர்கள் எவ்வளவு மரியாதையாக வந்து அவரை அரவணைத்து ஆறுதல் சொல்கிறார். ஆனால் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட மரியாதை தெரியவில்லை என ராதிகாவை விமர்சித்து வருகிறார்கள்.
சிலர் மறைந்த பாரதிராஜாவுக்கு இந்த அம்மா யார்? என்ன உறவு முறை? என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். பாரதிராஜா ராதிகாவின் குரு. ஆம், அவருக்கு முதல் திரைப்பட வாய்ப்பைக் கொடுத்தவரே பாரதிராஜா தான் என்பது பலரும் அறிந்திராத உண்மை.
