பாகுபாலி படத்தின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பெருமையாக பேசப்பட்ட இயக்குனர் ராஜமௌலி. பிரம்மாண்டத்தின் படைப்பு என்றே இவரை கூறலாம். இவர் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்காது. அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு காட்சியையும் கண் எதிரே நேரடியாக காட்டக் கூடியவர்.
அண்மையில் வெளிவந்த RRR படமும் திரையரங்குகளில் ஓடி மக்களின் ஏகாதிபத்திய வரவேற்பை பெற்றது. மேலும் இவரின் படங்கள் வசூலையும் வாரி தெறிக்கும். இப்படி இருக்கையில் இவருக்கு போட்டியாக தற்போது கே.ஜி.எஃப் படத்தை எடுத்து வெற்றிக் களிப்பில் ஆழ்த்திய பிரசாந்த் நீல் பற்றிதான் இணையவாசிகள் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
ராஜமௌலியா? பிரசாந்த் நீல் ஆ? என்ற விவாதங்கள் கூட சமூக வலைதளங்களில் ஆரம்பித்து விட்டார்கள்.இதனிடையில் ராஜமௌலி அடுத்த கட்ட வேலைக்கு தயாராகி விட்டதாக தகவல் வந்துள்ளது. மகேஷ் பாபுவை வைத்து புதையல் வேட்டையை மையமாக வைத்து படம் எடுக்க போறதாக தகவல் கசிந்துள்ளது.
இதையும் படிங்கள் : உன்ன பாத்தாலே போதை ஏறுது!… நாட்டுக்கட்ட உடம்ப நச்சுன்னு காட்டும் நடிகை….
இதற்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கு உள்ள காடுகளில் செட் போட்டு பட சூட்டிங் நடக்க இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…
TVK VIJAY…
Dhanush: இட்லி…