நன்றி மறந்த ரஜினி - பாக்கியராஜின் வேதனை பக்கங்கள்!
மறைந்த இயக்குனர் பாக்கியராஜின் நெருங்கிய நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் எவ்வளவு நெருக்கமான நண்பராக இருந்தாலும் பாக்கியராஜ் அவருக்கு எத்தனை ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் தனக்கென்று வரும்போது ரஜினி பாக்கியராஜுக்கு அந்த நன்றி கடன் கூட திரும்பி செலுத்தவில்லை என்ற ஒரு விஷயம் தற்போது அனைத்து பாக்கியராஜ் ரசிகர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
மறைந்த இயக்குனர் பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த வேட்டிய மடிச்சு கட்டு 1998 ஆண்டு வெளிவந்தது. பாக்கியராஜ் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நக்மா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வேண்டும் என பாக்கியராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் உதவி கேட்டாராம். ஆனால் அவரோ அது என் பாலிசி இல்லை. என்னால் நடிக்க முடியாது என்று ஒரே வார்த்தையில் கரராக கூறி மறுத்துவிட்டாராம்.
வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படம் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது. இதனால் பாக்கியராஜ் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பை சந்தித்தாராம். அந்த திரைப்படத்தில் அந்த கேமியோராலில் ரஜினி மட்டும் நடித்திருந்தால் நிச்சயம் அந்த திரைப்படம் வெற்றி பெற்றிருக்கும்.

ஆனால், ஒருமுறை ரஜினி கேட்டதற்காக பீக்கில் இருந்த பாக்கியராஜ் "நான் சிகப்பு மனிதன்" படத்தில் கேமியோ ரோல் நடித்துக் கொடுத்தார். அதே ரஜினி அவருக்கு இன்று வரும்போது ஒரு உதவி கூட செய்யவில்லை. பின்னாலில் ரஜினியே இதை நினைத்து வருத்தப்பட்டாராம் .
அதாவது நண்பர்களிடம் பேசும்போது நான் பாக்யராஜிற்கு உதவி இருக்க வேண்டும் நான் செய்ய தவறிவிட்டேன். ஒரு வேலை நான் அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் நடித்திருந்தால் நிச்சயம் பொருளாதார இழப்பிலிருந்து பாக்யராஜ் தப்பியிருப்பார்.

அவருக்காக நான் அந்த கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்தால் என்னிடம் நிறைய பேர் அதே மாதிரி கேமியோ ரோல் கேட்டு வருவார்கள் என்று பயந்து தான் அதில் நடிக்க மறுத்துவிட்டேன் என ரஜினி வருந்தியதாக பாக்யராஜ் பேட்டியில் கூறி இருக்கிறார் .
ஆனால் அது எல்லாம் மறந்து இருவரும் நண்பர்களாக பின்னர் பழகினார்கள். 50 ஆண்டுகால சாதனை நிகழ்ச்சி இயக்குனர் பாக்யராஜிற்காக நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு தங்கச்சங்கிலி அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
