">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அவர் சொன்ன கதை மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு – ரஜினியை அடுத்து இயக்குவது அவரா?…
அவர் சொன்ன கதை மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கு – ரஜினியை அடுத்து இயக்குவது அவரா?…
இளம் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் திரைக்கதை மற்றும் மேக்கிங் சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
இப்படத்தில் மலையாளத்தில் ஹிட் படங்களில் நடிக்கும் துல்கர் சல்மான் மற்றும் ரித்துவர்மா, ரக்ஷன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஒருபக்கம், இப்படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் ஆவார்.
எனவே, இப்படம் வெற்றி பெற்றதும், தலைவர் ரஜினியிடமிருந்து என்னை பாராட்டி செல்போன் அழைப்பு வரும் என காத்திருக்கிறேன் என செய்தியாளர்களிடமே கூறினார். அவர் கூறியது படியே அப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி அவரை தொடர்பு கொண்டு பாராட்டினார். அதோடு,வீட்டிற்கு வரவழைத்து நேரில் பாராட்டினார்.
அதோடு, எனக்கு எதாவது ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் இணைந்து பணியாற்றுவோம் என தெரிக்க, தேசிங் பெரியசாமிக்கு ரெக்கை முளைத்தது. அதன்பின் ஒரு ஒன்லைனை மட்டும் ரஜினிக்கு அவர் கூறியுள்ளார்.
அதன்பின் ரஜினி அண்ணாத்த படத்தில் நடிக்க துவங்கினார். படப்பிடிப்பு துவங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில் தற்போதுதான் வலிமை இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், தேசிங் பெரியசாமி கூறிய கதை ரஜினியின் மைண்ட்லேயே ஓடிக்கொண்டிருக்கிறதாம். எனவே,விரைவில் அவரை அழைத்து அந்த கதையை ரஜினி டெவலப் செய்ய சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி தொடர்ந்து இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவது குறிப்பிடத்தக்கது.