Connect with us

Cinema News

குரு சிஷ்யன் படத்துக்காக இதை செய்யலாமே? ஆசையாக கேட்ட ஏவிஎம்… யோசிக்காமல் செய்த ரஜினிகாந்த்!…

Guru shishyan: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸ் ஹிட் திரைப்படமான குரு சிஷ்யன் செம வசூலை குவித்தது. ஆனால் அந்த வெற்றிக்கு கடைசியில் ஏவிஎம் கேட்ட ஒரு ஆசை தான் காரணமாக கூறப்படுகிறது.

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் எழுதி, தயாரித்த திரைப்படம் குரு சிஷ்யன்.  இப்படத்தில் ரஜினிகாந்த், பிரபு, சீதா, கவுதமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். இப்படத்திற்கு ரஜினிகாந்திடம் இருந்து 25 நாளுக்கு தான் முத்துராமன் கால்ஷூட் வாங்கினாராம்.

இதையும் படிங்க: போட்றா வெடியா! ரிலீசான அஜித்- ஆதிக் படத்தின் டைட்டில்… என்னங்க இப்படி எல்லாம் இறங்கிட்டீங்க?

இப்படத்தில் தான் ரஜினிகாந்தும், பிரபுவும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். இப்படத்தின் ரிலீசுக்கு பின்னர் தான் தர்மத்தின் தலைவன் ரிலீஸானது. கவுதமி இப்படத்தின் மூலம் தான் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் 23 நாளில் முத்துராமன் முடித்து விட்டாராம்.

அடுத்த இரண்டு நாளில் வா வா வஞ்சி பாடலுக்கு டிராலியை தள்ளினாராம். ஒரே மாதத்தில் மொத்த திரைப்படத்தினையும் முடித்த எஸ்.பி.முத்துராமன் ஏவிஎம் சரவணனை அழைத்து போட்டு காட்டி இருக்கிறாராம். மொத்தமாக படத்தினை பார்த்த சரவணன் கடைசி க்ளைமேக்ஸ் சண்டையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால் மாஸாக இருக்கும் என்றாராம்.

இதையும் படிங்க: ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி’யில் தாமுவுடன் இணையப்போகும் பிரபலம்! இந்த ஹீரோவா?

இதுவே தான் எஸ்.பி.முத்துராமனுக்கும் தோன்றியது. ஆனால் ரஜினி கால்ஷூட்டை முடித்துவிட்டு இன்னொரு படத்தில் நடிக்கிறாரே என்ற கவலை இருந்ததாம். சரி எதுக்கும் கேட்டு பார்ப்போம் என ரஜினிக்கு கால் செய்து இருக்கிறார். அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் வரும் ஞாயிறுக்கிழமை நான் ப்ரீ தான்.

அன்னைக்கு வந்துவிடுகிறேன். என்னை வைத்து என்ன காட்சிகளை வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றாராம். சொன்னபடியே அன்னைக்கு வந்து முத்துராமன் சொன்னதை நடித்து கொடுத்தாராம். அந்த மாற்றத்துடன் மீண்டும் சரவணனுக்கு சர்ப்ரைஸாக போட்டு காட்ட அவரும் பிரமாதம் என்றாராம். அந்த மாற்றங்களுடன் ரிலீஸான குரு சிஷ்யன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையும் படிங்க: இந்த கேள்விய கேட்காதீங்க.. பதில் வராது! விமான நிலையத்தில் நிருபர்களுக்கு டாட்டா காட்டிய ரஜினி

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top