
Cinema News
பொன்னியின் செல்வனில் விஜயகாந்த்…பல வருடங்களுக்கு பின் ரஜினி சொன்ன சீக்ரெட்….
Published on
By
இயக்குனர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடெக்ஷன் இணைந்து அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.
பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பலரும் எடுக்க நினைத்து எடுக்க முடியாமல் போனது. தற்போது மணிரத்னம் இதை சாத்தியமாக்கியுள்ளார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்ய ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தி டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி,கமல் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினி பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்தார். பொன்னியின் செல்வன் நாவலை நான் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். அந்த கதையில் இடம் பெற்றிருந்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரம் என்னை கவர்ந்தது. 90களில் இப்படம் உருவாகியிருந்தால், ஆதித்ய கரிகாலனாக விஜயகாந்த் நடிப்பது பொருத்தமாக இருக்கும் என நான் நினைத்தேன்’ என தெரிவித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடிவேலு ஒரு முட்டாள் : சமீபத்தில் வடிவேலு ஒரு 10 youtube-பர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களை தூங்க...
நான் கைக்கூலி அல்ல தினக்கூலி : kpyபாலா இன்டர்நேஷனல் கைக்கூலி அவர் தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி பாலா...
TVK Vijay: கரூர் தவெக கட்சி கூட்டத்தின் போது நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கும்...
TVK Vijay: தவெக கட்சியின் மாவட்ட பயணத்தில் கடந்த சனிக்கிழமை கரூரில் நடந்த சந்திப்பில் 41க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு...