">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அண்ணாத்த படத்தால நஷ்டம்…அடுத்த படமும் உங்களுக்குதான்… ரஜினி கொடுத்த வாக்குறுதி….
அண்ணாத்த படத்தால நஷ்டம்…அடுத்த படமும் உங்களுக்குதான்… ரஜினி கொடுத்த வாக்குறுதி….
தர்பார் திரைப்படத்திற்கு பின் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. போன வருடம் துவங்கிய இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்பில் கொரோனா என பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு துவங்கி தற்போதுதான் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் ரஜினி கலந்து கொள்ளும் படப்பிடிப்பு முடிவடையவுள்ளது. எனவே, அவர் சென்னை திரும்பவுள்ளார். அதன் பின் ஒருவாரம் மற்ற நடிகர்கள் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அதன்பின் படப்பிடிப்பு முடிந்துவிடும் எனக்கூறப்படுகிறது.
எனவே, அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங் பெரியசாமி பெயர் அடிபட்டு வருகிறது. ஒருபக்கம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. அந்த தகவல் பின்னரே தெரியவரும்.
ஆனால், தனது அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கட்டும் என ரஜினி விரும்புகிறாராம். ஏனெனில், அண்ணாத்த படம் துவங்கி ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் பல கோடி நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும். மேலும், படப்பிடிப்பு தள்ளி தள்ளி போனாலும் பொறுமையாக காத்திருந்தது ரஜினிக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். எனவே, அதை ஈடு செய்ய அடுத்த படத்தையும் நீங்களே தயாரியுங்கள் என கூறிவிட்டாராம்.
ரஜினியை வைத்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.