Categories: Cinema News latest news

ஆணவத்தில் ஆடிய நேஷ்னல் கிரஷ்.. விரட்டி விட்ட பிரம்மாண்ட இயக்குனர்..

தனது கியூட் முகபாவனை முலம் ரசிகர்களை குதுகல படுத்திஇந்திய சினிமாவின் நேஷ்னல் கிரஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
கர்நாடகவை சேர்ந்த இவர் ,விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகினார். அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்து குறுகிய காலக்கட்டத்திற்குள் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். சுல்தான் படத்திற்கு பிறகு தமிழில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டுவருகிறார் . ராஷ்மிகா மந்தனா 3 கோடி சம்பளமாக ஒரு படத்திற்காக தற்போது பெற்று வந்துள்ளார்.

rashmika

புஷ்பா படத்தின் வெற்றி அவரது மார்க்கெட்டை எகிற செய்தால் அவரது சம்பளத்தை 2 கோடியிலிருந்து 5 கோடியாக ஏற்றி வாரிசு படத்தில் வாங்கி இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம் சரணின் 15 வது படத்தினை 170 கோடியில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். ஏற்கனவே பாலிவுட் நடிகை கியாரா அத்வானி முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். இப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவிடம் ஊடகத்துறையை சேர்ந்த ஒரு ரோலில் நடிக்க கேட்டுள்ளார் இயக்குனர் சங்கர்.

shankar

அப்படத்திற்காக ராஷ்மிகா 5 கோடி சம்பளமாக கேட்டடுள்ளார். இதற்கு சங்கர் கோபத்தில், லீட் ரோலில் நடிக்கும் பாலிவுட் நடிகை கியாராவுக்கே 4 கோடி தான் சம்பளம். தென்னிந்தியாவில் ஒருசில படங்களில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகும் ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சம்பளம் தரமுடியாது என்று ஓரங்கட்டியுள்ளார். தலைக்கால் புரியாமல் ஆடினால் இப்படித்தான் பல நடிகைகள் வாய்ப்பினை இழக்கிறார்கள் என டோலிவுட்டில் வட்டாரத்தில் ராஷ்மிகாவை கலாய்த்து வருகிறார்கள்.

Published by
SATHISH G