சாய் பல்லவி அதுக்கு சம்மதிக்கல!.. இல்லைன்னா பிரியா பவானி சங்கரே வந்து இருக்க மாட்டாங்க!..

 
சாய் பல்லவி அதுக்கு சம்மதிக்கல!.. இல்லைன்னா பிரியா பவானி சங்கரே வந்து இருக்க மாட்டாங்க!..

மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்ததாக ’29’ எனும் படம் உருவாகி வருகிறது. வரும் மே 8ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜை வைத்து ஒரு ப்ரோமோ வீடியோவையும் ரத்னகுமார் வெளியிட்டு இருந்தார்.

வைபவ், பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானர். அதன் பின்னர் அமலா பாலை வைத்து அவர் பண்ண ‘ஆடை’ சம்பவத்தை ஒட்டுமொத்த திரையுலகமும் மறக்கவே மறுக்காது.

சந்தானத்தை வைத்து ’குலு குலு’ படத்தை இயக்கினார். அந்த படமும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்னகுமார் மாஸ்டர், லியோ படங்களுக்கு அவருடன் இணைந்து கதை மற்றும் வசனத்தில் பங்காற்றினார்.

லியோ வெற்றி விழாவில் அவர் ரஜினிகாந்துக்கு எதிராக பேசிவிட்டார் என்கிற பஞ்சாயத்து வெடித்த நிலையில், கூலி படத்தில் ரத்னகுமார் பணியாற்றவில்லை.

இந்நிலையில், 29 படத்தை இயக்கி ரிலீசுக்கு கொண்டு வந்துள்ளார் ரத்னகுமார். இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், அளித்த பேட்டி ஒன்றில் சாய் பல்லவியை தான் மேயாத மான் படத்தில் நடிக்க வைக்க முதலில் அணுகியதாகவும், ஆனால், திருமணத்துக்கு முன்னதாக க்ளோஸ் ரிலேஷன் காட்சிகள் இருந்த நிலையில், சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டார் என்றார்.

தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்காமலே பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக பிரம்மாண்ட ராமாயணா படத்தில் சீதையாகவே நடித்து வருகிறார் சாய் பல்லவி. அமீர்கான் மகன் படமான ’ஏக் தின்’ படமும் விரைவில் அவர் நடித்து வெளியாக உள்ளது.

From Around the web