’29’ படத்துல தனுஷ் நடிச்சிருந்தா அவருக்கு ஒரு சூப்பர் ஹிட் கிடைச்சிருக்கும்!.. ரத்னகுமார் பளிச்!..
தனுஷ் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், சமீபத்தில் இயக்குநர் ரத்னகுமார் அளித்த பேட்டியில் ‘29’ படத்தில் தனுஷ் சார் நடித்திருந்தால் நிச்சயமாக இது அவரோட படமாக சூப்பராக வந்திருக்கும் என்று பேசியுள்ளார்.
தனுஷ் நடித்த கர படம் வெளியாகி 3 நாட்களில் வாஷ் அவுட் என ரிசல்ட்டுகள் வெளியாகி உள்ள நிலையில், தனுஷ் ஏன் ஒவ்வொரு ஊருக்கு சென்று சோகமான பிரச்னைகளை மட்டுமே படமாக்கி வருகிறார் என கலாய்த்து வருகின்றனர்.
ரசிகர்கள் கொண்டாடும் படங்களை தனுஷ் எடுக்க தவறி வருவதாகவும் ஃபாஸ்ட் ஃபுட் கடை, இட்லி கடை, ஆந்திரா மெஸ் என ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக செஃப் ஆக வேண்டும் என்கிற ஆசை தனுஷுக்கு இருந்த நிலையில், தொடர்ந்து தனது படங்களில் அதனை வலிய திணித்து வருகிறாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
மேயாத மான் படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த ரத்னகுமார், அமலா பாலை நிர்வாணமாக நடிக்க வைத்த ஆடை படத்திற்கு பிறகு பெரிய சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் அவர் சந்தானத்தை வைத்து இயக்கிய குலு குலு திரைப்படம் ஃப்ளாப் ஆன நிலையில், பல வருடங்கள் கழித்து 29 படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் முதலில் தனுஷ் சார் தான் நடித்திருக்க வேண்டும். அவரிடம் கதை சொன்னேன். ஆனால், இப்போது இருக்கும் சூழலில் இந்த படம் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டார். அவர் பண்ணியிருந்தால் இன்னமும் சூப்பரான படமாக வந்திருக்கும் என்று பேசியுள்ளார்.
