Categories: Cinema News latest news

தகடு தகடு டயலாக்குக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட ரஜினி டயலாக்..! பிரபலம் சொன்ன ஆச்சரிய தகவல்..!

Rajinikanth: கோலிவுட்டில் 80ஸ்களில் தொடங்கிய ரஜினி ஆதிக்கம் இன்னமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கு என்று தான் சொல்லலாம். அப்படி அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் காலம் கடந்தாலும் வைரலாகவே இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தினை கொடுத்து இருக்கிறது. அப்படி ரஜினியின் ஹிட் வசனம் உருவான ஆச்சரிய தகவலும் வெளியாகி இருக்கிறது.

அப்போதைய கோலிவுட்டின் ஐகானாக இருந்தவர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் தான். அந்த நேரத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் காக்கி சட்டை. இப்படத்தில் வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பார். சத்யா மூவிஸ் சார்பில் உருவான இப்படத்தில் தகடு தகடு டயலாக் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த டயலாக்குக்கு ஈடாக ரஜினி படத்திலும் ஒரு ஹிட் டயலாக்கை உருவாக்க படக்குழு நினைத்ததாம்.

இதையும் படிங்க: செம டெரர் பீஸா இருக்காரே சூர்யா!. வைரலாகும் ‘கங்குவா’ லுக் புகைப்படம்!..

அந்த நேரத்தில் உருவானது தான் மிஸ்டர் பாரத் திரைப்படம். இப்படத்திலும் சத்யராஜே வில்லனாக இருந்தார். படத்தினை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. எஸ்.பி.முத்துராமன் இப்படத்தினை இயக்கினார். முத்துராமனும் பலவாறு யோசிக்க அவருக்கு சரியாக வசனம் பிடிப்படவே இல்லையாம்.

ஒரு கட்டத்தில் எம்.சரவணன், அப்போதைய ஆனந்த் தியேட்டர் உரிமையாளர் உமாபதியை அடிக்கடி பார்க்கும் போது என்னம்மா கண்ணு என்பாராம். இது சரவணனுக்கு நியாபகம் வந்து இருக்கிறது. அவர் அந்த ஐடியாவை சொல்ல படக்குழுவும் உடனே ஓகே செய்துவிட்டார்களாம். அப்படி தான் என்னம்மா கண்ணு, செளக்கியமா டயலாக் உருவானதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: அஜித் படத்துக்கே ஐடியா கொடுத்த நடிகர் சிவா.. இந்த பட டயலாக்கை நோட் பண்ணிங்களா?

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily