Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

 
Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள புதிய படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய நிலையில் டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி இயக்கப் போகிறார் என்கிற செய்தி சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கிய ஒரு இளம் இயக்குனருக்கு ரஜினி எப்படி வாய்ப்பு கொடுத்தார் என திரையுலகமே ஆச்சர்யப்பட்டது. ஆனால் ரஜினி டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களிடம் பயணிக்க விரும்புகிறார் என சொல்லப்பட்டது..

திடீரென இந்த படத்திலிருந்து சிபி சக்ரவர்த்தி விலகி விட்டதாக இன்று காலை முதலே செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்தான், இதற்கான பின்னணி வெளியே தெரிய வந்திருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. டான் படத்திற்கு பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கத்தை திட்டமிட்டார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் அது நடக்காமல் போகவே தெலுங்கு நடிகர் நானியை வைத்து ஒரு படத்தை இயக்குவது முடிவானது.

அது தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் சிபிச் சக்கரவர்த்தியிடம் கதையை மாற்றுங்கள்.. அதை மாற்றுங்கள்.. இதை மாற்றங்கள் என்று சொல்லி அழுத்தம் கொடுத்த தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் கதையை மட்டும் வைத்துக்கொண்டு சிபி சக்கரவர்த்தியை வெளியேற்ற முடிவெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட பின்னரே சிபி சக்கரவர்த்தி அந்த படத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்..

Thalaivar 173: கதையை மாற்ற சொன்ன ரஜினி!.. சிபி சக்ரவர்த்தி விலகியதன் பின்னணி!..

தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை இயக்க சிபி சக்கரவர்த்தி கமிட் ஆனதும் ‘உங்களுக்காக இவ்வளவு செலவு செய்திருக்கிறோம்.. அதற்காக ரஜினி படத்தின் தயாரிப்பில் எங்களையும் இணைக்க சொல்லுங்கள்’ என்று அந்த தெலுங்கு தயாரிப்பாளர் சிபி சக்ரவர்த்திக்கு அழுத்தம் கொடுத்தாராம். ஆனால் ராஜ்கம்ல் பிலிம்ஸ் அதை ஏற்கவில்லை. இதையடுத்தே சிபி சக்கரவர்த்தி இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது..

மற்றொன்று ரஜினி ஒரு காரணமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.. அதாவது கூலி படத்திற்கு பின் ஆக்சன் படம் வேண்டாம் என முடிவெடுத்ததால்தான் சிபி சக்ரவர்த்தி சொன்ன கதையை ரஜினி டிக் அடித்தார். ஆனால், சமீபத்தில் சிபி சக்கரவர்த்தியை அழைத்த ரஜினி ‘கதைப்படி நான் ஒரு உளவாளி.. என்னிடம் ரசிகர்கள் இதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள்.. எனவே துரந்தர் 2 படத்தில் வருவது போல ஒரு பெரிய ரேஞ்சுக்கு படத்தை செய்தால் என்ன’ என்று கேட்க சிபி சக்கரவர்த்தி ஆடிப் போய்விட்டாராம்.

‘சார்.. மொத்த கதையையும் எழுதி முடித்து விட்டேன்.. இனிமேல் என்னால் கதையை மாற்ற முடியாது’ என சிபி சக்ரவர்த்தி சொல்லவே அவரை தூக்கி விட்டு அஸ்வத் மாரிமுத்துவை ரஜினி உள்ளே கொண்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

From Around the web