காந்தாரா ஹீரோவை சிரிக்க வைத்த கருணாஸ் மகன்!..யூத் படத்துக்கு இப்படியொரு பாராட்டு!..

 
காந்தாரா ஹீரோவை சிரிக்க வைத்த கருணாஸ் மகன்!..யூத் படத்துக்கு இப்படியொரு பாராட்டு!..

காந்தாரா படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான இயக்குநர் ரிஷப் செட்டி கென் கருணாஸ் நடிப்பில் வெளியான யூத் படத்தை பற்றி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

காந்தாரா அத்தியாயம் 1 திரைப்படம் முன்னதாக வெளியான காந்தாரா படத்திற்கு முன்னால் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் காட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறைகள் மன்னராட்சி காலத்தில் நடந்த கட்டுப்பாடுகள் என பலவற்றையும் காட்டியிருந்தார். காந்தாரா 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

அதை தொடர்ந்து ரிஷப் செட்டி தற்போது ஜெய் அனுமான் என்ற பான்-இந்தியா புராண படத்தில் நடிக்கிறார்.இது ஒரு மிதாலஜிக்கல் படமாக இருக்கும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2026-இல் அவர் இயக்கத்தை விட நடிப்பில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு விருது விழாவில் காந்தாரா படத்தின் பயணத்தைப் பற்றி பேசிய அவர்
அந்த படத்தின் வெற்றிக்கு தனது மனைவியின் உதவியே முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். மேலும், அவர் இளைஞர்களை சமூக சேவையில் ஈடுபட வேண்டி வலியுருத்தியிருந்தார்.

பான்-இந்தியா ஸ்டாரான ரிஷப் செட்டி காந்தாரா படத்தின் மூலம் தனக்கென தனி ஸ்டைல் உருவாக்கிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் கென் கருணாஸ் இயக்கி நடித்திருந்த யூத் திரைப்படத்தை பற்றி பதிவிட்ட அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு படம் முழுவதும் நான் சிரித்துக்கொண்டே இருந்தேன். யூத் திரைப்படம் அன்பு, நட்பு மற்றும் ஆழமான உணர்ச்சிகளால் நிரம்பியுள்ளது. இது அனைத்து பெற்றோர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மனமார்ந்த அஞ்சலி.

தனி ஒருவராக இவ்வளவு நுணுக்கமான ஆழத்துடன் எழுதி, இயக்கி, நடித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது. ஒவ்வொரு நடிகரும் திரையில் மிகவும் இயல்பாக உயிர் பெற்றுள்ளனர். சுராஜ் வெஞ்சரமுடு சார், தேவதர்ஷினி மேடம் மற்றும் கென்னின் நண்பர்கள் குழு அசத்திட்டாங்க, கென் தமிழ் சினிமாவுக்கு ஒரு சொத்தாக இருப்பீர்கள் என மனதார பாராட்டியுள்ளார். சமீபத்தில், யூத் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது.

From Around the web