Categories: Cinema News latest news

புடவை கட்டினாலும் நீ ஹாட்டுதான்!.. நடிகையிடம் ஜொள்ளுவிட்ட ரசிகர்கள்….

வட இந்தியாவை சேர்ந்தவர். குத்துச்சண்டை வீராங்கனையாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். அவர்தான் நடிகை ரித்திகா சிங். 2016-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட, அந்த மொழிகளிலும் அவரே கதாநாயகியாக நடித்தார்.

அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், அசோக் செல்வன் நடிப்பில் உருவான “ஓ மை கடவுளே” திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார் ரித்திகா சிங்.

எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன் மற்றும் சிறப்பு வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள ‘கொலை’ என்கிற புதிய படத்திலும் ரித்திகா நடித்து வருகிறார்.

ஒருபக்கம், சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக மற்ற நடிகைகள் போல போட்டோஷுட் நடத்தி போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அதுவும் சமீபகாலமாக மிகவும் கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா