Connect with us
uthaya

latest news

துணை முதல்வரான பிறகு உதயநிதிக்கு டெஸ்ட் வச்ச ரோபோ சங்கர்.. அங்கிருந்து வந்த பதில் என்ன தெரியுமா?

சின்னத்திரையில் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து பல காமெடி ஷோக்களில் காமெடி நடிகராகவும் இருந்து பிரபலமானவர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் ஒரு பாடி பில்டராக இருந்தார். அதன் பின் எப்படியாவது மீடியா முன் தோன்றி சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்தார் ரோபோ சங்கர். சிரிச்சா போச்சு டீமில் வடிவேல் பாலாஜி கொடுத்த ஆதரவால் மக்களால் ரசிக்கப்பட்டார் ரோபோ சங்கர்.

அதன் பிறகு அதே தொலைக்காட்சியில் நடக்கும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து தன் அந்தஸ்தை உயர்த்தியும் கொண்டார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில நிகழ்ச்சிக்கும் இவரே நடுவராகவும் இருந்தார். இப்படி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரையில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. மாரி, சிங்கம் , விஸ்வாசம் போன்ற பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்தார்.

இதனால் வெள்ளித்திரையில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். இப்படி அவருடைய வளர்ச்சி ஏறுமுகமாக செல்ல ஒரு கட்டத்தில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக மிகவும் மோசமான கண்டீசனுக்கு சென்றார். ஆளே அடையாளம் தெரியாமல் மாறினார் ரோபோ சங்கர். எப்படியோ அதிலிருந்து மீண்டு வந்து பழைய நிலைக்கு மாறினார். அதன் பிறகு தான் அவருடைய மகள் திருமணம் நடந்தது.

இதையும் படிங்க: சூர்யாவை ஜீரோ ஆக்கிய ஜோதிகா.. கங்குவா படத்திற்கு மட்டும் பொங்கி எழுந்தது ஏன்?

இந்த நிலையில் ரோபோ சங்கர் துணை முதல்வரான உதய நிதியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்தார். உதயநிதியிடம் ஆரம்பத்தில் ஒரு நல்ல நெருக்கம் இருந்தது. மிகவும் ஜாலியாக பேசுவேன். திடீரென துணை முதல்வரானார் என்ற செய்தி கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் எனக்குள்ள ஒரு சிறு தயக்கம் இருந்தது. முன்பு மாதிரி அவரிடம் பேச முடியுமா? பழக முடியுமா? அவருக்கு வாழ்த்து சொல்லலாமா? எதுவும் நினைப்பார? என்றெல்லாம் மனதிற்குள் ஓடியதாம்.

ஒரு நாள் மகள் திருமணத்திற்கு பத்திரிக்கை வைப்பதற்காக அங்கு போகலாம் என நினைத்தாராம் ரோபோ சங்கர். ஆனால் இப்போ போகலாமா என்ற சந்தேகத்துடன் உதய நிதியின் போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதில் ‘பாப்பாவுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். உங்களுக்கு பத்திரிக்கை வைக்கனும். உங்களுக்கு போன் பண்ணும் போதெல்லாம் சுவிட்ச் ஆஃப்னு வருது. அதான் இந்த வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன்’என சொல்லி அனுப்பினாராம்.

இதையும் படிங்க: புஷ்பானா பேரு இல்ல!… புஷ்பானா பிராண்டு!… செம மாஸா தெறிக்கவிட்ட புஷ்பா 2 டிரைலர்!…

எந்தவொரு சாதாரண மனிதனும் இந்த மாதிரி அனுப்பும் போது ‘ஓ அப்படியா? சரி வாங்க’ அப்படித்தான் சொல்வான். ஆனால் உதய நிதியும் பதிலுக்கு வாய்ஸ் மெசேஜில் ‘என் போன் சுவிட்ச் ஆஃப்ல இருக்கும் போது ஏன் போன் பண்ணீங்கனு’ பதிலுக்கு சொல்லி அனுப்பினாராம். அந்தளவுக்கு அதே எதார்த்தத்துடன் தான் உதய நிதி இருக்கிறார் என ரோபோ சங்கர் கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top