39வது பிறந்த நாளை கொண்டாடும் சமந்தா…ரசிகர்கள் வாழ்த்து

 
39வது பிறந்த நாளை கொண்டாடும் சமந்தா…ரசிகர்கள் வாழ்த்து

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் சமந்தாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறர். பாணா காத்தாடியில் அறிமுகம் ஆகி கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கதா நாயகியாக வலம் வருகிறார். சூப்பர் டீலக்ஸ் உள்ளிட சில படங்களில் சர்ச்சையாஅன் வேடங்களிலும் துணிந்து நடித்தார். நடிப்பு தவிர தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளார் சமந்தா. சுபம் என்ர தெலுங்கு படத்தை அடுத்து தற்போது தான் நடிக்கும் மா இண்டி பங்காரம் என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மயோசிடிஸ் என்கிற தோல் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். கடந்த ஆண்டு இயக்குநர் ராஜ் நிடிமொருவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் இன்று சமந்தா தனது 39வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆவருக்கு திரையுலகின்ர் மட்டுமின்றி ரசிகர்களும் வாழ்ந்த்துக்களை கூறி வருகின்றனர்.

From Around the web