ஜோதிகா ஸ்டைலில் சமந்தா... இனிமேல் எல்லாமே அப்படித்தானாம்!
ஜோதிகா ஸ்டைலில் சமந்தா... இனிமேல் எல்லாமே அப்படித்தானாம்!
நடிகை சமந்தா:
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த தமிழ் பெண்ணான நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
திரைப்படத்துறையில் வருவதற்கு முன்னர் வெல்கம் கேர்ளாக பணியாற்றிய இவருக்கு திரைப்பட வாய்ப்பு அதன் மூலமாக கிடைத்தது. அதை மிக சாதுரியமாக பயன்படுத்திக்கொண்டு இன்று நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

சமந்தா பேட்டி:
இதனிடையே அவரது முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் தற்போது மீண்டும் காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான மன வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா தற்போது கூறி இருக்கும் விஷயம்தான் திரையுலகை கவனிக்க வைத்திருக்கிறது.
ஆம் என்னுடைய அடுத்தடுத்த படங்களின் கதை ஹீரோவாக இருக்கும். கதை என்பது தயாரிப்பாளரையும் அதில் நடித்திருக்கும் நடிகர்களை விட பெரியது. எனவே சமூகத்தில் பெண்கள் எப்படி இருக்கிறார்களோ அதை பிரதிபலிக்கும் கதைகளில் நான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.
ஜோதிகா ஸ்டைலில் சமந்தா...

சமந்தா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாழ்ந்த கதைகளில் நடிக்கப் போகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஜோதிகா வரிசையில் தற்போது சமந்தாவும் இந்த முடிவு எடுத்திருப்பதால் கூடிய சீக்கிரத்தில் ஜோதிகாவை ஓரம் கட்டி விடுவாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
