"ஒரு சீட்" வச்சிட்டு பண்ற அலப்பறை இருக்கே - அரசியல் புள்ளியை தாக்கிய சனம் ஷெட்டி!
அதிரவைத்த அரசியல்:
அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரசியல் குறித்து பேசுவதெல்லாம் இந்த அரசியலில் தான் வரலாற்று சாதனையாக பார்க்க முடிகிறது.
விஜய்க்கு சிக்கல்:
இந்த தேர்தலில் தாவெக தலைவர் விஜய் அரசியலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் அவர் முதல்வராக பதவி ஏற்பதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பான்மைக்கு தேவைப்படும் எம்எல்ஏ சீட்டுகள் குறைவாக இருப்பதால் அதற்காக விஜய் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.
சனம் ஷெட்டி பளார்:
இந்த நிலையில் இது குறித்து நடிகை சனம் செட்டி தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருப்பது பெரும் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, "ஒரு சீட்டு ரெண்டு சீட்டு வச்சு இருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே என சனம் செட்டி நக்கல் அடித்து விமர்சித்திருக்கிறார்.
முக்கிய புள்ளியை விளாசல் !
இதற்கு பதிலடி கொடுத்த ஒருவர் "அதுவும் மக்கள் தீர்ப்பு தான்! அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் மேடம்!" என கமெண்ட் அடிக்க அதற்கு பதில் அளித்த சனம் செட்டி….
"மக்கள் வாக்களித்தது எம்எல்ஏ சீட்டுக்காக தானே தவிர துணை முதல்வர் பதவிக்காக அல்ல" என துணை முதல்வர் பதவி கேட்டு இக்கட்டான சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் விசிக கட்சி தலைவரான தொல் திருமாவளவன் அவர்களை தான் சனம் செட்டி மறைமுகமாக இப்படி தாக்குவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
