சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

 
சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக விஜய் நடிகை ஒருவருடன் கடந்த சில வருடங்களாகவே தொடர்பில் இருப்பதே விவாகரத்துக்கு காரணம் என சங்கீதா சொன்னது பேசுபொருளானது.

மேலும் தேவைப்பட்டால் அந்த நடிகையின் பெயரை வெளியிடுவேன் எனவும், அவர் மீது வழக்கு தொடர்வேன் எனவும் சங்கீதா கூறியிருந்தார். இந்த சம்பவம் நடந்து சில நாட்களில் விஜய் நடிகை திரிஷாவை அழைத்துக்கொண்டு ஒரு திருமண விழாவுக்கு சென்றதும் சர்ச்சையை கிளப்பியது. சங்கீதா குறிப்பிட்ட அந்த நடிகை திரிஷாதான் என பலரும் சமூகவலைத்தளங்களில் பலரும் பேசத் தொடங்கினார்கள்..

சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

இந்நிலையில், சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு ஏப்ரல் 20ம் தேதியான நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சங்கீதாவுக்கு விவாகரத்து அளிக்க விஜய் முன் வந்திருப்பதாக தெரிகிறது. மேலும் பரஸ்பரமாக பிரிவது தொடர்பாக சென்னையில் நேற்று இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.. மும்பையில் இருந்து வந்த இரு தரப்புக்கும் நெருக்கமான ஜோசியர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது..

சங்கீதா கேட்கும் செட்டில்மெண்ட்!. முடியாது என மறுக்கும் விஜய்!.. பேச்சுவார்த்தை தோல்வி…

அப்போது வேட்பு மனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்துக்கு 250 கோடி செட்டில்மெண்ட் தர வேண்டும் எனவும், மகன், மகளுக்கு தனியாக செட்டில்மெண்ட் கொடுக்க வேண்டும் எனவும் சங்கீதா தரப்பில் கேட்டதாக தெரிகிறது. ஆனால் மனைவிக்கு மட்டும் ரூ. 35 கோடி செட்டில்மெண்ட் அளிப்பதாகவும், மகன், மகள் இருவரின் எதிர்காலத்தையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் விஜய் தரப்பு சொன்னதாக தெரிகிறது.. அதற்கு சங்கீத தரப்பு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால் நீதிமன்றத்தில் சங்கீதா தரப்பு ஒரு தொகையை சொல்லும்.. அதன்பின் அதை கொடுக்க முடியுமா? முடியாதா? என்பதை விஜய் சொல்வார்.. விசாரணைக்கு பின் நீதிபதி ஒரு தீர்ப்பளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது..

From Around the web