
Cinema News
எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பிறகு அவருடன் நடிக்காத நடிகை!… இப்படியெல்லாம் நடந்துச்சா!..
Published on
By
50,60 களில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவரது வாழ்வில் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்த சம்பவம் எனில் அது எம்.ஆர்.ராதா அவரை சுட்டதுதான். ‘பெற்றால்தான் பிள்ளையா’ பட தயாரிப்பாளருக்கு ஒரு லட்சம் கடன் கொடுத்திருந்தார் எம்.ஆர்.ராதா. ஆனால், தயாரிப்பாளரால் அதை திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த பஞ்சாயத்து எம்.ஜி.ஆரிடம் போக அப்போது நடந்த பிரச்சனையில்தான் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டார்.
1966ம் வருடம் வெளியான ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. இந்த படம் வெளியான சமயத்தில்தான் எம்.ஆர்.ரதா எம்.ஜி.ஆரை சுட்ட சம்பவம் நடந்தது. இந்த படத்திற்கு பின் வெளியான திரைப்படம் அரச கட்டளை. இந்த படத்திலும் சரோஜா தேவிதான் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டிருந்தது.
அதாவது, எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி எந்த படத்திலும் இணைந்து நடிக்கவே இல்லை. ‘பெற்றால்தான் பிள்ளையா’ படம் வெளியாகி 3 வருடங்கள் கழித்து வெளியான படம் அடிமைப்பெண். இப்படத்தில் சரோஜாதேவியும், கே.ஆர்.விஜயாவும் இணைந்து நடிப்பதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால், என்ன காரணத்தினாலோ ஜெயலலிதாவை அந்த படத்தில் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த சரோஜாதேவி எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின் ஏன் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்பது இப்போது வரை புதிராகவே இருக்கிறது.
Rashmika Mandana: சிவகார்த்திகேயனின் புதிய படத்தை யார் இயக்கப் போகிறார் அல்லது அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என...
Ajith Vijay: கோலிவுட்டில் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வளம் வருபவர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல். சின்ன பட்ஜெட்டுகளில் சில படங்களை தயாரித்திருக்கிறார்....
Seeman: இயக்குனர் மணிவண்ணனிடம் சில படங்களில் வேலை செய்தவர் சீமான். மேலும் பாஞ்சாலங்குறிச்சி, வாழ்த்துக்கள், தம்பி, இனியவளே, வீரநடை ஆகிய 5...
Vijay TVK: சினிமாவில் உச்சம் தொட்டு அடுத்து அரசியலிலும் சாதிக்கவேண்டும் என்ற முனைப்போடு வந்தார் விஜய். ஆரம்பத்தில் மாணவ மாணவியர்களுக்கு தேவையான...
Vijay: தற்போது அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் பெரும்...