Categories: Cinema News latest news throwback stories

இவரா காதல் மன்னன்?!.. ஜெமினி கணேசனை பார்த்து முகம் சுழித்த சரோஜா தேவி….

திரையுலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் ஜெமினி கணேசன். அதிகமான காதல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்ததாலும், நிஜ வாழ்விலும் காதல் மன்னனாகவே இருந்ததாலும் அவருக்கு அந்த பெயர் வந்தது. பல காதல் கதைகளில் இவர் நடித்துள்ளார்.

அதேபோல், கன்னடத்து பைங்கிளியாக திரையுலகில் நுழைந்து முன்னணி கதாநாயகியாக மாறியவர் நடிகை சரோஜா தேவி. வாகினி ஸ்டுடியோவில் ஒரு கன்னட படத்தில் நடித்து கொண்டிருந்த போது அவரை பார்த்த எம்.ஜி.ஆர் அவர் நடிக்கவிருந்த ‘திருடாதே’ படத்திற்காக அவரை ஒப்பந்தம் செய்தார். நாடோடி மன்னன் படத்திலிருந்து பானுமதி விலகவே அவருக்கு பதில் சரோஜா தேவியை நடிக்க வைத்தார்.

அதன்பின் சரோஜா தேவி தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருமுறை வாகினி ஸ்டுடியோவில் அவர் நடித்து கொண்டிருந்த போது அங்கு ஜெமினி கணேசன் வந்தார். அப்போது ‘இவர் யார்?’ என சரோஜா தேவி கேட்க ‘இவர்தான் ஜெமினி கணேசன்.. காதல் மன்னன்’ என படக்குழுவினர் சொல்ல அவரைப்பார்த்து ‘இவரா காதல் மன்னன்?’ என சரோஜா தேவி முகம் சுழித்தாராம். அதற்கு காரணம் ஜெமினி கணேசன் அப்போது ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்திற்காக கூனன் கெட்டப்பில் இருந்தார்.

அதே ஜெமினி கணேசனுடன் கல்யாணப்பரிசு, பணமா பாசமா, பார்த்தால் பசி தீரும், கை ராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா